×

பாரில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு: சைதாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை நந்தனம் பகுதியில் ‘பிக் புல்’ என்ற பெயரில் தனியார் பார் இயங்கி வருகிறது. கடந்த 19ம் தேதி நள்ளிரவில் மதுபான பார் அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு அடையாளம் தெரியாத 5 பேர் பிக் புல் பாருக்கு வந்தனர். பாரின் மேலாளர் நேரம் கடந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் அந்த 5 பேரும் எங்களை பாருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். அந்த நேரத்தில் கடந்த 19ம் தேதி நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மதுபாரில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் பாருக்கு வந்த இளம்பெண்கள் பலர் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பிரச்னை குறித்து தகவல் தெரிந்து, நியூஸ் தமிழ் 24 X 7 தொலைக்காட்சி நிருபர் சுதர்சன் மற்றும் சிலருடன் பிக் புல் பாருக்கு வந்தார்.

மதுபாரில் இருந்து வெளியே வந்த இளம் பெண்கள் குறித்து சிலர் ஆபாசமான வார்த்தைகளை கூறியுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட இளம் பெண்களில் ஒருவர், புகார் அளித்தார். புகாரின் மீது சைதாப்பேட்டை போலீசார், இளம்பெண் அளித்த வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, நியூஸ் தமிழ் 24X7 தொலைக்காட்சியின் நிருபர் மற்றும் சிலர் ஆபாசமாக பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து சைதாப்பேட்டை போலீசார் நிருபர் சுதர்சன் மற்றும் சிலர் மீது ஐபிசி 143, 341, 294(பி), 354(எ)509 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாரில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு: சைதாப்பேட்டை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Big Bull ,Nandanam ,Saidappettai ,
× RELATED தனியார் மதுபாரில் தகராறு பெண் செய்தி வாசிப்பாளரை தாக்கிய பவுன்சர் கைது